- தொட்டாற்சிணுங்கி
தேவையான பொருள்கள்:
- தொட்டாற்சிணுங்கி வேர்
- நீர் – தேவையான அளவு
செய்முறை:
- முதலில் தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின் 40 கிராம் அளவு மண் சட்டியில் எடுத்து மூன்று பங்கு நீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் வரை நன்கு காய்ச்சி கசாயம் தயார் செய்து கொள்ள வேண்டும்.
- பின் அதனை வடிகட்டி ஒரு நாளைக்கு இரண்டு வேளை என சாப்பிட்டு வந்தால் தளர்ச்சி நீங்கி புத்துணர்ச்சி பெறும்.
- மேலும் விந்தணு பிரச்சனையும் தீரும். எனவேதான் இதற்கு காமவர்த்தினி என்ற பெயர் வந்தது.
தொட்டாற்சிணுங்கி சூப்பின் மருத்துவக்குணங்களை உணர்ந்து நம் அன்றாட உணவுடன் கஷாயமாக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம். வாழ்வில் வளம் பெறுவோம்.